குடும்ப அட்டைகளில் ஆதார் எண்ணை பதிவு செய்ய நடவடிக்கை


குடும்ப அட்டைகளில் ஆதார் எண்ணை பதிவு செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2016 7:45 PM GMT (Updated: 13 Dec 2016 2:33 PM GMT)

திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களிடமும் செல்போன் எண்களை பெற்று நாளை மறுநாளுக்குள் (வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும், அதேபோன்று அந்த அட்டைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை எண்ணை வருகிற 25–ந்தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Next Story