திருவானைக்காவல் கோவிலில் 3 இடங்களில் கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்


திருவானைக்காவல் கோவிலில் 3 இடங்களில் கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 13 Dec 2016 8:49 PM GMT)

திருவானைக்காவல் கோவிலில் 3 இடங்களில் கார்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் 3 இடங்களில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவானைக்காவல் கோவில்

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலைக்கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

அதன்படி திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று கார்்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சொக்கப்பனை

முன்னதாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் நேற்று இரவு 7 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தனர். அங்கு கோபுரத்திற் கும், நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை கண்டருளினர். சுவாமி, அம்மனுக்கு முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் நாலுகால் மண்டபம் வந்தனர்.

அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். அங்கு கொளுத்தப்பட்ட சொக்கப்பனையை சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கண்டருளினர்.

பின்னர் தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு கொளுத்தப்பட்ட சொக்கப் பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.

Next Story