நின்ற ஸ்கூட்டர் மீது லாரி மோதியது: 2 வயது குழந்தையுடன் இளம்பெண் சாவு


நின்ற ஸ்கூட்டர் மீது லாரி மோதியது: 2 வயது குழந்தையுடன் இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:00 PM GMT (Updated: 14 Dec 2016 6:53 PM GMT)

நின்ற ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். லாரி மோதியது பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகள்கள் மோகனப்பிரியா (வயது 28), திவ்யா (23). இதில் மோகனப்பிரியாவுக்கு திருமண

பெருந்துறை

நின்ற ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

லாரி மோதியது

பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகள்கள் மோகனப்பிரியா (வயது 28), திவ்யா (23). இதில் மோகனப்பிரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் கலையரசன் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்தியன் (6) என்ற மகனும், ஹர்சனா (2) என்ற மகளும் உள்ளனர். மோகனப்பிரியா 2 குழந்தைகளுடன் வாவிக்கடையில் உள்ள தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மோகனப்பிரியாவும், திவ்யாவும் பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக குழந்தை ஹர்சனாவை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு மோகனப்பிரியாவை ஏ.டி.எம். மையத்தில் விட்டுவிட்டு 2 பேரும் வீட்டுக்கு புறப்படுவதற்காக ஸ்கூட்டரை இயக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் லாரி ஸ்கூட்டரில் சிக்கிக்கொண்டது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் ஸ்கூட்டர் அருகே நின்று கொண்டிருந்த திவ்யாவும், ஹர்சனாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பாலக்காட்டை சேர்ந்த சிவனை (52) கைது செய்தார்.

இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Next Story