மார்கழி மாத பிறப்பையொட்டி பாப்பாரப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் திருப்பாவை பாடி செல்லும் பக்தர்கள்


மார்கழி மாத பிறப்பையொட்டி  பாப்பாரப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் திருப்பாவை பாடி செல்லும் பக்தர்கள்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:15 PM GMT (Updated: 16 Dec 2016 1:28 PM GMT)

மார்கழி மாத பிறப்பையொட்டி தினமும் பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக செல்வார்கள். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் மற்றும் சிறுவர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை திரு

பாப்பாரப்பட்டி,

மார்கழி மாத பிறப்பையொட்டி தினமும் பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக செல்வார்கள். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் மற்றும் சிறுவர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இந்த கோவிலில் மார்கழி மாதம் அதிகாலையில் பஜனை நடக்கிறது. தை மாதம் முதல் தேதி மகரசங்கராந்தி அன்று இந்த பஜனை நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story