இளம்பெண் பாலியல் பலாத்காரம் மாமனார் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு


இளம்பெண் பாலியல் பலாத்காரம் மாமனார் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 12:54 PM GMT)

காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள்(வயது 22). இவருடைய மாமனார் மகன் கருப்பையா(22), மணியம்பட்டி ஆளவந்தான் குடியிருப்பை சேர்ந்தவர். சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள்(வயது 22). இவருடைய மாமனார் மகன் கருப்பையா(22), மணியம்பட்டி ஆளவந்தான் குடியிருப்பை சேர்ந்தவர். சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் கருப்பையா குடிபோதையில் நுழைந்துள்ளார். பின்னர் காளியம்மாளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காளியம்மாள் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story