புத்தாண்டையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு குண்டுமல்லி பூ கிலோ ரூ.1,300–க்கு விற்பனை


புத்தாண்டையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு குண்டுமல்லி பூ கிலோ ரூ.1,300–க்கு விற்பனை
x
தினத்தந்தி 31 Dec 2016 10:30 PM GMT (Updated: 31 Dec 2016 1:28 PM GMT)

புத்தாண்டையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. குண்டுமல்லி பூ கிலோ ரூ.1,300–க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1,300–க்கு விற்பனை சேலம் பழைய பஸ்நிலையம் அருகே வ.உ.சி. பூ விற்பனை மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள

சேலம்,

புத்தாண்டையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. குண்டுமல்லி பூ கிலோ ரூ.1,300–க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.1,300–க்கு விற்பனை

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே வ.உ.சி. பூ விற்பனை மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனியின் தாக்கம் காரணமாக மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

இந்த காரணமாக கடந்த சில நாட்களாகவே பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் புத்தாண்டையொட்டி நேற்று பூக்கள் விலை மேலும் உயர்ந்தது. அதாவது, குண்டுமல்லி பூ கிலோ ரூ.1,300–க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சன்னமல்லி கிலோ ரூ.1,000–க்கு விற்கப்பட்டது. இந்த பூக்களின் வரத்து மார்க்கெட்டிற்கு வெகுவாக குறைந்துள்ளது.

விலை உயர்வு

மேலும் கனகாம்பரம் கிலோ ரூ.600–க்கும், காக்கட்டான் கிலோ ரூ.500–க்கும், அரளி பூ கிலோ ரூ.100–க்கும், சம்பங்கி கிலோ ரூ.70–க்கும், சாமந்தி கிலோ ரூ.50–க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ.120–க்கும், கலர் பூ கிலோ ரூ.60–க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.50–க்கும், ரோஸ் ஒரு கட்டு ரூ.80–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, ‘கடும் பனியின் தாக்கம் காரணமாக மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளது. இதனாலும், புத்தாண்டையொட்டியும் பூக்கள் விலை மேலும் உயர்ந்துள்ளது. பூக்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய ஓரளவு வாய்ப்புள்ளது‘ என்றனர்.


Next Story