ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,628 டன் உரம் தஞ்சை வந்தது


ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,628 டன் உரம் தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 31 Dec 2016 10:30 PM GMT (Updated: 31 Dec 2016 2:31 PM GMT)

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,628 டன் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரம் தஞ்சை வந்தது. நெற்களஞ்சியம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது தஞ்சை மாவட

தஞ்சாவூர்,

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,628 டன் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரம் தஞ்சை வந்தது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமும், தனியார் விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் அவ்வப்போது உரம் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரெயிலில் 29 வேகன்களில் டி.ஏ.பி. மற்றும் யூரியா உரம் தஞ்சை வந்தது. 1,430 டன் யூரியாவும், 198 டன் டி.ஏ.பி.யும் என மொத்தம் 1,628 டன் உரம் தஞ்சை வந்தது.

தனியார் சேமிப்பு கிடங்கு

இந்த உரங்கள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், தனியார் சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story