கோவை பனைமரத்தூரில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கோவை பனைமரத்தூரில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 4:58 PM GMT)

கோவை செல்வபுரம், பனைமரத்தூரில் கடந்த 3 மாதங்களாக போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கத்தைவிட குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையி

பேரூர்,

கோவை செல்வபுரம், பனைமரத்தூரில் கடந்த 3 மாதங்களாக போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கத்தைவிட குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் 15 நாட்களுக்கு பிறகும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து நேற்று காலி குடங்களுடன் பொது மக்கள் பூசாரிபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மேற்கு பகுதி போலீஸ் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாநகராட்சி ஊழியர்களும் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்கள், குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story