பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவர் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 9:15 PM GMT (Updated: 27 Feb 2017 7:10 PM GMT)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

செங்குன்றம்,

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு மா.பொ.வேதா தெருவை சேர்ந்தவர் ஆசை என்ற ஆசைதம்பி (வயது37).

அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை ஆசைதம்பி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ஒருவர் கைது

இதுகுறித்து மாணவியின் தாயார் மாதவரம் போலீசில் ஆசைதம்பி மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story