உயிரை காப்பற்றியவரை தினமும் சந்தித்து செல்லும் பருந்து


உயிரை காப்பற்றியவரை தினமும் சந்தித்து செல்லும் பருந்து
x
தினத்தந்தி 29 April 2017 9:55 AM GMT (Updated: 29 April 2017 9:55 AM GMT)

பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.



தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5 மாதங்களுக்கு முன்  கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல் திணறியிருக்கிறது

அந்த பருந்தை காப்பாற்றிய அனில்குமார் அதை தன் வீட்டுக்கு அழைத்து சென்று காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலே அதை வைத்துள்ளார்.

பின்னர் காயம் குணமாக அந்த பருந்து காட்டுக்குள் பறந்து சென்று விட்டது. அதன் பின்னர் தினமும் காலையில் 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் தவறாமல் அனில்குமார் வீட்டுக்கு வந்து, அவரிடம் இரை வாங்கி உன்கிறது.

மேலும் அனில்குமார் வீட்டில் இருக்கும் வரை விளையாடும் பருந்து அவர் வெளியில் சென்ற பின்னர் பறந்து சென்று விடுகிறது.

இதுகுறித்து அனில்குமார் கூறுகையில், என் வீட்டுக்கு வரும் பருந்துக்காகவே மீன், கோழி இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை அதிகாலையில் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிடுவேன்.

நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அருகிலிருக்கும் மரத்தில் உட்கார்ந்து கொண்டு எனக்காக அது காத்திருக்கும்.

என் வண்டி சத்தம் கேட்டவுடன் என் வீட்டுக்கு பருந்து வந்து விடும் . ஒரு மாதத்துக்கு மேலாக இது நடந்துகொண்டு இருக்கிறது.

என் மீது பருந்து உட்காரும் போது அது எந்தளவு என் மீது பாசம் வைத்துள்ளது என்பதை உணருகிறேன் என அனில்குமார் கூறியுள்ளார்.

Next Story