கடனை திருப்பி தருவதாக கூறி வரவழைத்து பெண்ணை கற்பழித்த 2 பெஸ்ட் பஸ் டிரைவர்கள் கைது


கடனை திருப்பி தருவதாக கூறி வரவழைத்து பெண்ணை கற்பழித்த 2 பெஸ்ட் பஸ் டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 29 April 2017 10:05 PM GMT (Updated: 29 April 2017 10:05 PM GMT)

கடனை திருப்பி தருவதாக கூறி பெண்ணை வரவழைத்து அவரை மிரட்டி கற்பழித்த 2 பெஸ்ட் பஸ் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். பெஸ்ட் பஸ் டிரைவர்கள் தானே மாவட்டம் அம்பர்நாத் துவார்லிபாடா பகுதியை சேர்ந்தவர் சுனில் மோரே (வயது 35). இவரது நண்பர் அரவிந்த் கும்பார் (40)

தானே,

கடனை திருப்பி தருவதாக கூறி பெண்ணை வரவழைத்து அவரை மிரட்டி கற்பழித்த 2 பெஸ்ட் பஸ் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெஸ்ட் பஸ் டிரைவர்கள்

தானே மாவட்டம் அம்பர்நாத் துவார்லிபாடா பகுதியை சேர்ந்தவர் சுனில் மோரே (வயது 35). இவரது நண்பர் அரவிந்த் கும்பார் (40). இருவரும் மும்பை பெஸ்ட் பஸ்சில் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மும்பை ஹில் லைன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவரிடம் இருந்து இருவரும் பணம் கடன் வாங்கினர். இந்த நிலையில், பணத்தை திருப்பி தருவதாக கூறி, அம்பர்நாத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்கு சம்பவத்தன்று அவரை அழைத்தனர்.

கற்பழிப்பு

இதனை நம்பிய அந்த பெண், அங்கு சென்றார். அப்போது, சுனில் மோரேவும், அரவிந்த் கும்பாரும் சேர்ந்து மிரட்டி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், இதனை செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால், இந்த கற்பழிப்பு வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விட்டு, உனது மானத்தை வாங்குவோம் என்று மிரட்டினர். இதனால், அதிர்ந்து போன அந்த பெண், மும்பை திரும்பியதும் ஹில் லைன் போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெஸ்ட் பஸ் டிரைவர்கள் சுனில் மோரேவையும், அரவிந்த் கும்பாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story