தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 8:00 PM GMT (Updated: 8 Jun 2017 6:28 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது;–

அம்மா திட்ட முகாம்

தமிழக அரசால், அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கிட அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த அம்மா திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி தாலுகாவில் கோரம்பள்ளம் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வெள்ளுர் மற்றும் கஸ்பா கிராமங்களிலும், திருச்செந்தூர் தாலுகாவில் நாலுமாவடி கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் அரசூர்–2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் சித்திரம்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் அரியநாயகபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் தாப்பாத்தி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஓட்டப்பிடாரம் கிராமத்திலும், கயத்தார் தாலுகாவில் அரசன்குளம் கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது.

மனுக்கள் கொடுக்கலாம்

இந்த முகாம்களில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story