சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து திருநங்கை தற்கொலை


சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து திருநங்கை தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2017 11:00 PM GMT (Updated: 8 Jun 2017 7:42 PM GMT)

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மணிகண்டன்(என்ற)தேவயாணி (வயது25). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை சிம்சன் அருகே அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அருகில் இருந்த கூவம் ஆற்றில் திருநங்கை தேவயாணி குதித்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

அதைத்தொடர்ந்து விரைந்து வந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் படகுகள் உதவியுடன் தேவயாணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உடல் மீட்பு

ஆனால் வெகுநேரம் ஆகியும் தேவயாணி கிடைக்காததால் எழும்பூர், மயிலாப்பூர் ஆகிய பகுதியில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இரவு முழுவதும் தேடியும் தேவயாணி கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை தேவயாணியின் உடல் கூவம் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதைத்தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேவயாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story