பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் சி.எஸ்.டி.– பன்வெல் இடையே சேவை இருக்காது

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.டி.– பன்வெல் இடையே ரெயில் சேவை இருக்காது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.டி.– பன்வெல் இடையே ரெயில் சேவை இருக்காது.
கல்யாண்– தானேமத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண்– தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு பாதையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11 மணி முதல் மாலை 4.21 மணி வரை சி.எஸ்.டி. நோக்கி வரும் விரைவு ரெயில்கள் அனைத்தும் கல்யாண்– தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். தானேக்கு பிறகு இந்த ரெயில்கள் மீண்டும் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். அதன் பிறகு இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா, தாதர், பைகுல்லா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சி.எஸ்.டி. வந்தடையும்.
காலை 10.08 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரெயில்சேவை இருக்காதுதுறைமுக வழித்தடத்தில் குர்லா– வாஷி இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.20 மணி முதல் பிற்பகல் 3.48 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.டி.க்கும், காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.37 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சர்ச்கேட்– மும்பை சென்ட்ரல் இடையே விரைவு ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் சர்ச்கேட்– மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். பராமரிப்பு பணியையொட்டி ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.






