மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்


மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:30 PM GMT (Updated: 5 Sep 2017 7:12 PM GMT)

மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

விழுப்புரம்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட (அ.தி.மு.க. அம்மா)அணி செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேற்று முன்தினம் நீக்கி கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டார். இதை கண்டித்து விழுப்புரம் அருகே காணை பஸ் நிறுத்தம் அருகே ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரனை கண்டித்து அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், இளங்கோவன், கலியன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மல்லிகா, கோலியனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருவேங்டம், கிருஷ்ணமூர்த்தி, சிவா, நாகராஜ், சரவணன், கிளை கழக செயலாளர்கள் காணை சக்திவேல், சேட்டு, பரந்தாமன், முருகன், ஆறுமுகம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சி கூட்டுரோட்டில் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது முன்னாள் அவைத்தலைவர் கண்ணன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் ராமசந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சோழன், மாணவரணி ஒன்றிய செயலாளர் லட்சுமி காந்தன், இளைஞரணி நகர செயலாளர் சரவணன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வார்டு செயலர் திருமலை, முன்னாள் நகர செயலாளர் நடராசன், பேரவை ஒன்றிய செயலாளர் பூங்குன்றம், இலக்கிய அணி பாலு, சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story