தூத்துக்குடி யூனியன் பகுதியில் கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ஓட்டல் உரிமம் ரத்து


தூத்துக்குடி யூனியன் பகுதியில் கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ஓட்டல் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 20 Sep 2017 8:30 PM GMT (Updated: 20 Sep 2017 2:07 PM GMT)

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் கழிவுகளை ரோட்டில் கொட்டினால், சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் கழிவுகளை ரோட்டில் கொட்டினால், சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என, யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கழிப்பறை இல்லாத வீடு..

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த யூனியனுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளதா? என்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கழிப்பறை கட்டப்படாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து தூய்மை தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

கழிவுகளை ரோட்டில்...

பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் உபயோகப்படுத்தப்படும் பேப்பர் கப்கள் அனைத்தையும் முறையாக சேகரித்து தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக, பேப்பர் கப் மற்றும ஓட்டல் கழிவுகளை ரோட்டில் கொட்டினால் சம்பந்தப்பட்ட ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியனை முழுசுகாதாரமான யூனியனாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story