மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Jan 2018 10:15 PM GMT (Updated: 15 Jan 2018 9:19 PM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் புதுவிராலிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). தொழிலாளி. இவர் பெரம்பலூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். மங்களமேடு அருகே வந்த போது, ஓலைப்பாடியை சேர்ந்த வெற்றிவேல் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கண்ணனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story