மதுரை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது


மதுரை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 17 Jan 2018 8:46 PM GMT)

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் மதியம் வந்தது.

மதுரை,

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்  பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் காலில் அணியும் காலுறையில் தங்கம் கடத்தி வந்ததும், மேலும் 2 பயணிகளும் தங்கத்தை வெவ்வேறு வகையில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

 இதைத்தொடர்ந்து பயணிகள் 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 7.041 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story