வீட்டில் பலகாரம் தயாரித்து கொண்டிருந்த பெண் வழுக்கி விழுந்து சாவு


வீட்டில் பலகாரம் தயாரித்து கொண்டிருந்த பெண் வழுக்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 21 Feb 2018 11:45 PM GMT (Updated: 21 Feb 2018 8:34 PM GMT)

ஆலங்குடி அருகே வீட்டில் பலகாரம் தயாரித்து கொண்டிருந்த பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 26). இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிமேகலை பலகாரம் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் கொட்டி கிடந்த தண்ணீரில் மணிமேகலையின் கால்கள் வழுக்கியதில் அருகில் இருந்த இரும்பு கட்டில் மீது விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மணிமேகலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மணிமேகலையின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதுபோல இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிமேகலைக்கு திருணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story