108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 9:35 PM GMT)

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ரெங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 2017-ம் ஆண்டு சம்பள உயர்வுக்கான பணத்தையும், ஈட்டிய விடுப்புக்கான பணத்தையும் தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்காமல் தனியார் நிர்வாகம் கையாடல் செய்து உள்ளதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story