பெண்ணை கொலை செய்ய வந்தவன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம்


பெண்ணை கொலை  செய்ய வந்தவன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 17 March 2018 6:22 AM GMT (Updated: 17 March 2018 6:22 AM GMT)

சென்னையில் பெண்ணை கொலை செய்ய வந்த கூலிபடையைச் சேர்ந்தவன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

சென்னை

சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை அருகே, கிராம நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நர்சத் அக்தர் (25). திரிபுராவைச் சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது மனைவி நர்கிஷ் (20). இருவருக்கும் திருமணம் ஆகி ஏழு மாதம்தான் ஆகிறது. நர்சத் அக்தர் ஏற்கனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி திரிபுராவில் இருக்கிறார். அவருக்கு தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியாது. 

இந்நிலையில் கணவரின் திருமணம் குறித்த தகவல் முதல் மனைவிக்கு தெரியவர அவர் ஆத்திரமடைந்துள்ளார். தனது கணவரை அபகரித்துக்கொண்ட நர்கிஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பரான திரிபுராவைச் சேர்ந்த ஷாகிர் உசைன் (26) என்பரிடம் 50,000 ரூபாய் பணம் கொடுத்து கொலை செய்ய சொல்லியுள்ளார். நர்சத் அக்தர் கொலை செய்யும் நோக்குடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நர்கிஷ் அக்தர் அழகில் மயங்கியுள்ளார்.

கொலை செய்ய மனமில்லாத ஷாகிர் உசைன், கத்தியை காட்டி மிரட்டி தன்னுடன் உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட முயன்றுள்ளார். ஆனால் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். யாரிடமும் நடந்ததை சொல்லக்கூடாது மீறி சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டான். 

இதனால் செய்வதறியாது வீட்டில் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்த நர்ஷித் கணவரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இது தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ஷாகிர் உசைனை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்யும் நோக்கத்தோடு சென்று மனம் மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story