உப்பள்ளி தாலுகாவில் சம்பவம் பெற்ற தாயுடன் தகாத உறவு; கல்லூரி மாணவன் கொலை


உப்பள்ளி தாலுகாவில் சம்பவம் பெற்ற தாயுடன் தகாத உறவு; கல்லூரி மாணவன் கொலை
x
தினத்தந்தி 25 April 2018 10:15 PM GMT (Updated: 25 April 2018 10:04 PM GMT)

பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மகனை கொலை செய்த தந்தையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

உப்பள்ளி, 

பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மகனை கொலை செய்த தந்தையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தாயுடன் தகாத உறவு

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோலிவாடா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா இர்காரு. விவசாயி. இவருடைய மகன் சரணப்பா(வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் இவரது தாயுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சரணப்பாவும், அவரது தாயும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. தனது மனைவியும், மகனும் தகாத உறவில் ஈடுபட்டதை அறிந்த மல்லப்பா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது மகனான சரணப்பாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

சரமாரியான வெட்டு

மேலும் ஆத்திரமடைந்த மல்லப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து சரணப்பாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சரணப்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து மல்லப்பா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சரணப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவியுடன் பெற்ற மகனே தகாத உறவில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மல்லப்பா அவரை கொலை செய்தது தெரியவந்தது.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் சரணப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மல்லப்பாவை வலைவீசி தேடிவருகின்றனர். பெற்ற தாயுடன் மகன் தகாத உறவில் ஈடுபட்டதால், தந்தையே மகனை கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story