பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 11 May 2018 10:55 PM GMT (Updated: 11 May 2018 10:55 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்யாண் - தானே

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் - தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10.48 மணி முதல் மாலை 4.14 மணி வரை சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் கல்யாண் - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். எனவே இந்த ரெயில்கள் தாக்குர்லி, கோபர், மும்ரா, கல்வா ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. பயணிகள் கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் அந்த ரெயில்நிலையங்களுக்கு செல்லலாம்.

ரெயில்சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.47 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. காலை 9.53 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில் சேவை இருக்காது. எனினும் இந்த நேரத்தில் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.43 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி, கோரேகாவிற்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. இந்த தகவலை மத்திய ரெயில் வெளியிட்டுள்ளது.

Next Story