ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 10:00 PM GMT (Updated: 12 May 2018 8:14 PM GMT)

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

இந்து முன்னணி சார்பில் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் பூசப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. மாநில பிரச்சார அணி தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சக்திமுருகேஷ், செயலாளர்கள் வக்கீல் முரளி, சங்கர், கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story