காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:00 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மாநில செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரகோத், அன்பழகன், செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் சக்திவேல், பிரசார செயலாளர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story