அ.ம.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம்


அ.ம.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

அரியலூர் மாவட்டம், திருமானூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் சுந்தரமூர்த்தி, தா.பழூர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மூக்கையாபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் ரெங்கசாமி, கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்தையன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். முன்னதாக திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். 8 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும். அ.ம.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி கரும்பாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story