விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது


விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2018 10:44 PM GMT (Updated: 14 May 2018 10:44 PM GMT)

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை விமான நிலை யத்தில் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் வெளிநாட் டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் சுங்க துறை புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் 2 பேரிடமும் இருந்து ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் மடகாஸ்கரை சேர்ந்த யோகய் ரபிடைசன், பிரான்சை சேர்ந்த ராஜீவ் என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story