ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்


ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 16 May 2018 8:54 PM GMT (Updated: 16 May 2018 8:54 PM GMT)

ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் நிக்லேஷ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி சர்ச்கேட்டிற்கு மின்சார ரெயிலில் சென்றார். இதில், ரெயில் கார்- பாந்திரா இடையே சென்ற போது வாசலில் நின்ற நிக்லேசின் செல்போனை தண்டவாளம் ஓரம் கீழே நின்று கொண்டு இருந்த ஒருவர் பறித்து சென்றார்.

இது குறித்து அவர் பாந்திரா ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நிக்லேசிடம் செல்போன் பறித்த பைசல் சேக்(வயது21) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 13 ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலிபர் பைசல் சேக்கிற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. 

Next Story