தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 7 Jun 2018 9:30 PM GMT (Updated: 7 Jun 2018 7:09 PM GMT)

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாட்டுப் படகு மீனவர்கள் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாட்டுப் படகு மீனவர்கள் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் உயிர் இழந்தனர். இதை கண்டித்து அன்று முதல் தூத்துக்குடியில் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் மீன்கள் விலை உயர்த்தி விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் உயிர் இழந்த 13 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கடலுக்கு சென்றனர்

இதை தொடர்ந்து நேற்று போராட்டத்தை கைவிட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வரும் நாட்களில் மாவட்டத்தில் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.


Next Story