அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:33 PM GMT (Updated: 7 Jun 2018 11:33 PM GMT)

மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

விருதுநகர்,

மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் 26 அரசு பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கு தனியாக 19 பள்ளி விடுதிகளும் என மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இந்த அரசு விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகித அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவும் தங்கும் வசதியும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

எனவே இந்த அரசு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story