விராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
விராலிமலை அருகே சாலை நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 44). தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குளவாய்ப்பட்டியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவற்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
தொழிலாளி பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தகோபால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 44). தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குளவாய்ப்பட்டியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவற்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
தொழிலாளி பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தகோபால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story