பெரம்பலூர்-அரியலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர்-அரியலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

பெரம்பலூர்-அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நேற்று மாலை பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ஜோதி, ராமர், கலியமூர்த்தி, தயாளன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் மதியழகன், தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராமராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அரியலூர் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். 

Next Story