வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...


வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...
x
தினத்தந்தி 19 Jun 2018 5:57 AM GMT (Updated: 19 Jun 2018 5:57 AM GMT)

பல்வேறு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ :

சி.எம்.ஆர்.எல். எனப்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஆர்கிடெக்சர் எக்ஸ்பெர்ட், எக்சிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 33 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சி.ஏ., ஐ.சி.ஏ.ஐ., எம்.டெக், பி.இ., பி.டெக். மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் 28-6-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் :

திருவாரூரில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காண்டிராக்டு அடிப்படையில் கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேதியியல், இயற்பியல், இசை மற்றும் ஓவியம், சமூகவியல், புவியியல், கணினி அறிவியல், அப்ளைடு சைகாலஜி, ஆங்கிலம், நிர்வாகவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, இந்தி, கணிதவியல், மைக்ரோ பயாலஜி, தமிழ் உள்ளிட்ட 21 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து , நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பாடப்பிரிவினருக்கும் வெவ்வேறு நாளில் நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் மற்றும் சான்றுகளை 5 நகல்கள் எடுத்துக் கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். 21-6-2018-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை cutn.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஐ.ஓ.சி.எல். :

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிழக்கு மண்டலத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிளஸ்-2 படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-7-2018-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவு 30-9-2018-ந் தேதி வெளியாகும். விரிவான விவரங்களை https://www.iocl.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 



Next Story