இருவேறு இடங்களில் விபத்து மின்சார ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி
இருவேறு இடங்களில் மின்சார ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெரம்பூர்,
சென்னை செனாய் நகர் டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மாலா (வயது 45). இவர், நேற்று காலை வில்லிவாக்கம்–பெரம்பூர் கேரேஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் மோதியதில், மாலா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவருடைய மகன் மனோ (25). இவர், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி – பேசின்பாலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது சென்னை சென்டிரலில் இருந்து இருந்து ஆவடி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பூர் ரெயில்வே போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story