புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 12 July 2018 10:44 PM GMT (Updated: 12 July 2018 10:44 PM GMT)

புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆரணி, 

ஆரணி, அருணகிரிசத்திரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பில் ஆய்வகம், நூலகம், சாய்வுதளத்துடன் கூடிய அடுக்குமாடி பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சி.ஸ்டேன்லிபாபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையகலந்துகொண்டு அடுக்குமாடி பள்ளி கட்டிடத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.ன் 

பின்னர் அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் காரணமாக தொழிற்சாலைகளுக்கும், பள்ளிகளுக்கும், பல்வேறு துறையினருக்கும் தணிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆடிட்டிங்’ (பட்டய கணக்கு) பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்ததிட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டங்கள் செல்போன் மூலம் ‘டவுன்லோடு’ செய்து படிக்கலாம். 6, 7, 8 படிக்கும் மாணவர்களுக்கு ‘டேப்’ என்ற புதிய பாடத்திட்டம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தயாராக உள்ளது. புதிய பாடத்திட்டங்கள் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு 5 கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்மொழியில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்துள்ளது. இதனால் தமிழ்மொழியில் தேர்வு

அடுத்த கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளாகும். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கும், தனித்தேர்வுகளுக்கும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் எஸ்.திருமலை, பள்ளி தலைமையாசிரியர் எம்.வசந்தா, ஒப்பந்ததாரர் உஷாராணிசங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், ஏ.சி.எஸ். கல்விக்குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சு.இளவரசு நன்றி கூறினார். 

Next Story