உடன்குடி அருகே பரிதாபம் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


உடன்குடி அருகே பரிதாபம் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2018 9:00 PM GMT (Updated: 13 July 2018 1:44 PM GMT)

உடன்குடி அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

உடன்குடி, 

உடன்குடி அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கட்டிட தொழிலாளி

உடன்குடி புதுமனை கோட்டைவிளையைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்து பாண்டி (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தேவி. இவர்களுடைய மகன் தங்கபாண்டி (15). முத்து பாண்டிக்கு மதுகுடிக்கம் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் முத்துபாண்டி மது குடித்து வந்ததால், கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்து பாண்டி அப்பகுதியில் உள்ள அரளி பூந்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, முத்து பாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story