விவசாயிகள் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் வருகிற 31–ந் தேதி கடைசி நாள்


விவசாயிகள் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 5:15 PM GMT)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயகள் வருகிற 31–ந் தேதி வரை இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

திருவண்ணாமலை,

விரைவாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரை திறன் வரையுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2½ லட்சம், 7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2¾ லட்சம், 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயகள் வருகிற 31–ந் தேதி வரை இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.


Next Story