தா.பழூர் ஒன்றிய அளவிலான குறுவட்ட கால்பந்து போட்டிகள்


தா.பழூர் ஒன்றிய அளவிலான குறுவட்ட கால்பந்து போட்டிகள்
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 7:07 PM GMT)

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போட்டியில் தா.பழூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத் குமார், வந்தியத்தேவன், லூசியா மேரி, ரவிச்சந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியை ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டு பார்த்தனர். 

Next Story