தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2018 9:30 PM GMT (Updated: 3 Aug 2018 4:51 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி சகுந்தலா(வயது 60). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று நெஞ்சுவலி அதிகமானதால், வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story