வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் - கலெக்டர் கணேஷ் தகவல்


வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் - கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2018 6:33 AM GMT (Updated: 4 Aug 2018 6:33 AM GMT)

வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்வது குறித்து கலெக்டர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது.பின்னர் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வநிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இ-சேவை மையங்களில் மட்டும் இல்லாமல் பொதுமக்கள் தாமாகவே சான்றிதழ்கள் பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் UM-A-NG என்ற செயலியை போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை www.tnes-ev-ai.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story