9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது


9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2018 10:41 PM GMT (Updated: 10 Aug 2018 10:41 PM GMT)

பாண்டுப்பில் 9 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள கல்லூரிகள், ஓட்டல்கள் முன் ஒரு கும்பல் கஞ்சா விற்று வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பாண்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், சம்பவத்தன்று பாண்டுப்பில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் விஜய் (வயது26), முஸ்தபா(21), தாயாபாய்(21), ஜசுன்ந்தா(50), சக்தி புஜாரி(32), உத்தம்(46), கமலேஷ், சாய்பன்(21) என்பதும், இவர்கள் பாண்டுப், விக்ரோலி, பவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story