திருமயம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்


திருமயம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 18 Aug 2018 10:30 PM GMT (Updated: 18 Aug 2018 7:46 PM GMT)

திருமயம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சித்தளஞ்சாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயம் பெரியமாடு, நடுமாடு, சிறியமாடு என 3 பிரிவாக நடந்தது. இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை பாலகுடிப்பட்டி கோபிநாத் மாடும், 2-வது பரிசை பிராமணவயல் சுந்தரம் மாடும், 3-வது பரிசை விராமதி தையல்நாயகி மாடும் பெற்றன.

நடுமாடு பிரிவில் முதல் பரிசை பாதரகுடி மனோஜ் குமார் மாடும், 2-வது பரிசை சித்தாத்திவயல் பொன்னுசாமி மாடும், 3-வது பரிசை குளத்துப்பட்டி சாமிசுரேஷ் மாடும் பெற்றன. சிறியமாடு பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் வெண்டி முத்தையா மாடும், 2-வது பரிசை அரிமளம் சேத்துமேல் செல்வ அய்யனார் மாடும், 3-வது பரிசை பரமத்தூர் குமார் மாடும் பெற்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை திருமயம் - அரிமளம் சாலையில் பொதுமக்கள் இருபுறமும் கூடிநின்று கண்டுகளித்தனர்.

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள மடக்கரை பத்திர காளியம்மன் கோவிலில் நடந்த ஆடி பூர விழாவையொட்டி நேற்று முன்தினம் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 25-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். 

Next Story