மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2018 9:45 PM GMT (Updated: 25 Aug 2018 12:15 AM GMT)

கம்மாபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்மாபுரம், 

கம்மாபுரம் அருகே உள்ள தட்டான் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சங்கர் கணேஷ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. சம்பவத்தன்று இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர் கணேஷ் உடல்நலக் கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story