காஞ்சீபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை


காஞ்சீபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2018 9:45 PM GMT (Updated: 5 Sep 2018 6:37 PM GMT)

காஞ்சீபுரத்தை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஒழையூர் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருத்தை (வி‌ஷம்) குடித்தார்.

வெங்கடேசனை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story