அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா: ராகுல்காந்தி வாழ்த்து


அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா: ராகுல்காந்தி வாழ்த்து
x
தினத்தந்தி 9 Sep 2018 12:12 AM GMT (Updated: 9 Sep 2018 12:12 AM GMT)

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி செல்போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

வில்லியனூர்,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று தனது 49–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை 6 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையும், தொடர்ந்து கருவடிக்குப்பம் சித்தானந்த கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

பின்னர் தன்னுடைய குலதெய்வமான தட்டாஞ்சாவடி வீரபத்திரர் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து வில்லியனூர் மணவெளியில் உள்ள தன் இல்லத்திற்கு சென்று பெற்றோரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பிரமாண்ட ‘கேக்’ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தற்போது டெல்லியில் உள்ள புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் முகுல்வாஷ்னிக், செயலாளர் சென்னா ரெட்டி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ராஷ்டிரிய ஜனதா தள மாநில தலைவர் சஞ்சீவி, வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆறுமுகம், மனோகர், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலர் ரவிக்குமார், சுதாகர், பிரபு, ரமேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர் அயூப், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், வில்லியனூர் தொகுதி காங்கிரஸ் பிரமுகர்கள் பிரேமானந்த், பிரபாகர், சாராயக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சம்பத், ஜெயவள்ளி ரியல் ஏஜென்சி உரிமையாளர் வெங்கடேஷ், தொழிலதிபர் அருள் பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் நேரில் சென்று சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், பரிசுப்பொருட்கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாக்களிலும், தொகுதியில் மக்கள் நற்பணி மன்றங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் மாணவ–மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். நமச்சிவாயம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளிலும் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் பிரமுகர்கள் அன்பு, கிருஷ்ணராஜி, பால்ராஜ், கல்யாணசுந்தரம், வேலாயுதம் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story