புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை


புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2018 11:30 PM GMT (Updated: 10 Sep 2018 8:18 PM GMT)

புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தி சாமானிய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான மக்கள் விரோத பாரதீய ஜனதா அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்த புதுவை மாநில மக்களுக்கும், வியாபார பெருமக்களுக்கும், தனியார் பஸ் உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஒன்றுபட்ட பின்தங்கியோர் குடியரசு கட்சி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுக்கும், புதுவைபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


Next Story