வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை கற்பழித்த திருட்டு ஆசாமி போலீஸ் வலைவீச்சு


வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை கற்பழித்த திருட்டு ஆசாமி போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:18 PM GMT)

வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை கற்பழித்த ஆசாமி, வீட்டில் இருந்த நகை, பணத்தையும் திருடிச்சென்றார். போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை, 

வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை கற்பழித்த ஆசாமி, வீட்டில் இருந்த நகை, பணத்தையும் திருடிச்சென்றார். போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிறுமி கற்பழிப்பு

மும்பை பாந்திரா கிழக்கு பாரத் நகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்தனர். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது, 20 வயது மதிக்கத்தக்க திருட்டு ஆசாமி ஒருவர் திடீரென சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம்போட முயன்றாள். அப்போது கத்தியை காட்டி கொன்று விடுவதாக அந்த வாலிபர் சிறுமியை மிரட்டினார்.

மேலும் அவர் சிறுமியை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். பின்னர் அவளின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிவிட்டு தப்பிஓடிவிட்டார்.

ஆசாமிக்கு வலைவீச்சு

இந்தநிலையில் மாலையில் வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர் மகள் கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவளது கட்டுகளை அவிழ்த்துவிட்டு நடந்த சம்பவத்தை கேட்டனர். அப்போது, திருட்டு ஆசாமியால் தான் கற்பழிக்கப்பட்டதையும் நகை, பணத்தை திருடி சென்றதையும் கூறி அழுதாள்.

இதைக்கேட்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பி.கே.சி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டு ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story