ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்த மூதாட்டி சாவு கணவருக்கு தீவிர சிகிச்சை


ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்த மூதாட்டி சாவு கணவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 8:46 PM GMT)

ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்த மூதாட்டி இறந்து போனார். அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காளஓடு புலிக்கல் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). சிறுநீரக பாதிப்பால் அவதியடைந்து வந்தார்.

இவருடைய மனைவி காவேரியம்மாள் (68). இவர் வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்த காளியப்பனும், காவேரியம்மாளும் நேற்று முன்தினம் பூச்சி மருந்து (விஷம்) குடித்த நிலையில் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தனர்.

இவர்களை அக்கம், பக்கத்தினர் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி காவேரியம்மாள் இறந்து போனார். காளியப்பனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story