வாராந்திர பராமரிப்பு பணி மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


வாராந்திர பராமரிப்பு பணி மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:09 PM GMT (Updated: 15 Sep 2018 11:42 PM GMT)

வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மும்பை, 

வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பராமரிப்பு பணி

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு- மாட்டுங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை வாராந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்கள் காலை 10.37 மணி முதல் மாலை 4.02 மணி வரை இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பிவிடப்படும்.

இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் சயான் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். பின்னர் மாட்டுங்காவில் இருந்து மீண்டும் ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த மார்க்கத்தில் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யாவிகார் ஆகிய இடங்களில் ரெயில் சேவை இருக்காது.

துறைமுக வழித்தடம்

பராமரிப்பு பணியின் போது, சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.16 மணி முதல் பிற்பகல் 2.54 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களிலும், சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் கல்யாணில் இருந்து காலை 11.04 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர் குர்லா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களிலும் நின்று வரும்.

துறைமுக வழித்தடத்தில் பன்வெல்- வாஷி இடையே இருமார்க்கத்திலும் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

சேவைகள் ரத்து

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் செல்லும் ரெயில்கள் காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரையும், மேற்கண்ட இடங்களில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்கள் காலை 11.06 மணி முதல் மாலை 4.34 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் பன்வெல்- தானே இடையே காலை 10.12 மணி முதல் மாலை 4.26 மணி வரையும், தானே- பன்வெல் இடையே 11.14 மணி முதல் மாலை 4 மணி வரையும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பன்வெல்- அந்தேரி இடையேயும் ரெயில் ேசவை இருக்காது. இருப்பினும் சி.எஸ்.எம்.டி. - வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story