ராமநாதபுரத்தில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 8:48 PM GMT)

ராமநாதபுரத்தில் தமிழக அரசை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

தமிழக அரசை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனை பகுதியில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:–

 தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி ஊழலில் சிக்கி உள்ளது. அனைத்து பணிகளிலும் கமி‌ஷன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

கடந்த தி.மு.க. ஆட்சியில் இ–டெண்டர் முறையில் நடைபெற்ற பணிகள் ஒதுக்கீடு தற்போது அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்குவதற்காக நடக்கிறது. குட்கா ஊழல், நெடுஞ்சாலை ஊழல், மணல் கொள்ளை என அனைத்திலும் ஊழல் நடக்கிறது. ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். ஊழல் அமைச்சர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், நகர் செயலாளர் கார்மேகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல், திசைவீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழிபோஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் அய்யனார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், நிர்வாகிகள் டி.கே.குமார், வெள்ளா அப்பாஸ்கனி, இளைஞரணி கோபிநாத், ராமநாதபுரம் ஒன்றிய முன்னாள் நிர்வாகி நாகலிங்கம். சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்.

ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா, மண்டபம் நகர் செயலாளர் ராஜா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் வி.எம்.கே.காந்தகுமார், தி.மு.க. மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்லம், நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.ராஜேஷ்கண்ணா, பட்டணம்காத்தான் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா கதிரேசன், மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வி.சி.கனகராஜன், இளைஞர் அணி பட்டணம்காத்தான் தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story